பதிவு செய்த நாள்
27
மார்
2015
10:03
மன்னார்குடி: மன்னார்குடி, ராஜ கோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து, ஸ்வாமியை வழிபட்டனர். மன்னார்குடி, ராஜ கோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று தேர் திருவிழா நடந்தது. பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு, ருக்மணி, சத்யபாமா சமேதராக ஸ்ரீவித்ய ராஜகோபால ஸ்வாமி ராஜ அலங்காரத்தில், காலை, 8 மணிக்கு தேரில் எழுந்தருளினார்மதியம், 2 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 6.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.தேர் விழாவை முன்னிட்டு, வீதிகள் தோறும் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கினர். தேர்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மன்னார்குடி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீஸார் செய்தனர்.