பதிவு செய்த நாள்
27
மார்
2015
11:03
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருந்திருவிழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருந்திருவிழா, நேற்று துவங்கியது. அதன் துவக்கமாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் உற்சவ மூர்த்திகள், கொடியேற்று மண்டபத்தில் எழுந்தருளினர். அதையடுத்து, கொடிப்பட்டத்திற்கு விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அதிகாலை 5:40 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. அதையடுத்து, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு அபிஷேகமும், அர்ச்சனையும் நடந்தன. வேதகோஷம் மற்றும் தேவார விண்ணப்பத்துடன் கொடியேற்றம் நிறைவடைந்தது. பின் காலை, 8:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. நேற்று இரவு, மயில் வடிவில், கற்பகாம்பாள், கபாலீஸ்வரரை வழிபடும் காட்சி, தொடர்ந்து, புன்னை, கற்பகம், வேங்கை மர வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்தது.