Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆகமவிதிப்படி மட்டுமே பூஜைகள் நடத்த ... அமிர்தகடேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2011
10:06

கோவை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும் 30ம் தேதி அவிநாசி ரோட்டிலுள்ள கொடீசியா வளாகம் அருகே, மாலை 4.00 மணியளவில் இத்திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சத்தியநாராயணா, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்ரமணியம், திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் நாகிரெட்டி, திருமலை தேவஸ்தான இணைச் செயல் அலுவலர் யுவராஜ், திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஸ்ரீநிவாசராஜ், தேவஸ்தான இந்து தர்ம பிரசார பரிஷத் செயலாளர் காசிரெட்டி வெங்கட்ரெட்டி மற்றும் தேவஸ்தான உறுப்பினர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சுமங்கலி ஜூவல்லரி தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: இத்திருக்கல்யாண உற்சவம் திருமலையில் நாள்தோறும் நடக்கிறது. ஏழை, எளிய மக்களால் அதிக செலவு செய்து இந்நிகழ்ச்சியை காண முடியாது. அவர்கள் வேண்டுதல் நிறைவேறவும், வேதனைகள் தீர்க்கவும், திருமலை சென்று ஸ்ரீநிவாச பெருமாளை தரிசனம் செய்ய முடியாது. அவ்வாறு, தரிசனம் செய்ய முடியாத பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமலையில் எப்படி திருமணம் நடத்தப்படுகிறதோ, அதே போல் அங்குள்ள உற்சவமூர்த்திகளோடு, அதே பட்டாச்சாரியார்களை கொண்டு, ஆகம முறைப்படி கோவையில் இத்திருமணம் நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதி இலவசம். பிரசாதம், குடிநீர் மற்றும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் இலவசமாக வழங்கப்படுகிறது. திறந்த வெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கை வசதி செய்து தரப்படுகிறது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருமண உற்சவத்தை பார்க்கும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது ஐதீகம். மக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்பெற வேண்டும். இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார். விழா கமிட்டிகள் தர்மராஜ், ஆலால சுந்தரம், சம்பந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar