திருவாடானை : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் தூயபேதுரு ஆலய கொடியேற்றம் கடந்த 19ம் தேதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நடந்தது. தூயபேதுரு அமர்ந்த தேர் முக்கிய வீதி வழியாக சென்றது. மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி ஏராளமானோர் தேர் முன்னால் ஊர்வலமாக சென்றனர். விழாவை முன்னிட்டு பாதிரியார் ஜெரால்டுஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.