பதிவு செய்த நாள்
30
மார்
2015
12:03
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் காலனி, ஓம்சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 3ம் தேதி நடக்கிறது. தர்மபுரி, நெசவாளர் நகரில், ஓம்சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணி முடிவுற்று வரும், ஏப்ரல் 1ம் தேதி காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, கலச பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. 2ம் தேதி காலை, 9 மணிக்கு இரண்டாம் காலயாகபூஜை, கோபுர கலசம் வைத்தல், 5 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், இரவு, 8.50 மணிக்கு மேல் அஷ்டபந்தன பிரதிஷ்டை கண் திறத்தல் ஆகியவை நடக்கிறது. 3ம் தேதி காலை, 7.30 நான்காம் கால யாகபூஜை, 10 மணிக்கு மேல் 10.15க்குள் ஓம்சக்தி மாரியம்மன், துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.12 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 5.30 மணிக்கு அம்மன் திருவீதி நடக்கிறது.