பதிவு செய்த நாள்
30
மார்
2015
12:03
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருப்பணிகளை, ஹிந்து சமய அற நிலையத்துறை கமிஷனர் ஆய்வு செய்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக, கோவிலில் சுத்தம் செய்தல், மராமத்து பணிகள் உட்பட பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹிந்து சமய அறிநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி, ஸ்ரீரங்கள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். கோவிலில் உள்ள பூதத்தாழ்வார் சன்னதி, ஆயிரம் கால் மண்டபம், தேசராயர் மண்டபம், புதிய அன்னதான கூடம் உட்பட கோவிலில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, ஹிந்து சமய அறநிலையத்துறை மண்டல கமிஷனர் கல்யாணி, கூடுதல் இணை கமிஷனர் கவிதா, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், சமயபுரம் கோவில் இணை கமிஷனர் தென்னரசு, திருவானைக்காவல் கோவில் உதவி கமிஷனர் கண்ணையா, வெக்காளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஜெயப்பிரியா, மண்டல உதவி கமிஷனர் முல்லை ஆகியோர் உடன் இருந்தனர்.