கோவை : குருத்தோலை ஞாயிறு விழா அனைத்து சர்ச்களிலும், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசலம் நகரில் இயேசு கிறிஸ்து பவனியாக சென்ற நிகழ்வை நினைவு கூரும் தினமே, குருத்தோலை ஞாயிறு. கோவையிலுள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., லுத்தரன் உட்பட பல பிரிவு சர்ச்சுகளை சேர்ந்த மக்களும், உற்சாகமாக குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி, பவனியாக சென்று, குருத்தோலை ஞாயிறு தினத்தை நேற்று கொண்டாடினர்.