கடலூர் : பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் 68ம் ஆண்டு பிரமோற்சவம் நடந்தது. கடலூர் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் 68ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. 22ம் தேதி காலை 7 மணிக்கு வில் வளைத்தல், 9 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 23ம் தேதி சக்தி கரக வீதியுலா நடந்தது. 24ம் தேதி மாலை 6 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். 25ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.