செஞ்சி: செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம் முனீஸ்வரர் கோவிலில் வரும் 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு 2ம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, புற்று மண் பூஜை, கடம் ஸ்தாபனம், முதல் கால யாகசாலை பூஜைகளும், இரவு 10 மணிக்கு சாமி கண் திறப்பும் நடக்க உள்ளது. மறுநாள் 3ம் தேதி காலை 8 மணிக்கு கோ.பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, தத்வார்ச்சனை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், 10.10 மணிக்கு முனீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது.