பதிவு செய்த நாள்
31
மார்
2015
12:03
பாபநாசம்: கும்பகோணம் மறை மாவட்டம், பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, முக்கிய வீதிகளின் வழியாக, குருத்தோலை ஞாயிறு பவனி ஆலயத்தை அடைந்தது. கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளர் பிலிப் சந்தியாகு தலைமையில், திருப்பலி நடந்தது. வரும், 6ம் தேதி, குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பக்கிரிசாமி தலைமையில், மாலை, 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், இரவு, 8 மணிக்கு கலை நிகழ்ச்சியும், இரவு, 10 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது. 7 ம் தேதி, குடந்தை ஆயர் அந்தோனிசாமி தலைமையில் திருப்பலியும், காலை நிகழ்ச்சிகள், இரவு ஆடம்பர தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீஸார் செய்துள்ளனர்.