மந்தாரக்குப்பம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மந்தாரக்குப்பம் பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பட்டாடை உடுத்தி, திரு க்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, இன்று காலை பக்தர்கள் பால்குடம், மயில், இளநீர் காவடி சுமந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.