Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பிரதோஷம்: உருவான வரலாறு ... வீரபாண்டியில் பக்தர்கள் சிரமம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2011
11:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, அறநிலையத்துறை மற்றும் பொது தீட்சிதர்கள் என, தனித்தனியாக அழைப்பிதழ் அச்சடித்து வினியோகிப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், சோழ மன்னர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில், பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கோர்ட், வழக்கு என, 20 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின், 2009ம் ஆண்டு, பிப்., 2ம் தேதி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு, நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அறநிலையத்துறை சார்பில், கோயிலில் பிரசாத கடை நடத்துவதுடன், ஒன்பது இடங்களில் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. உண்டியல் வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளில் 52 லட்சம் ரூபாய்; பிரசாதம் மூலம் வருவாய், 25 லட்சம் ரூபாய். அரசு கட்டுப்பாட்டிற்கு கோயில் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கோயில் முழுமையாக அரசு கட்டுப்பாட்டிற்கு வருவதில், சிக்கல் நீடிக்கிறது. இருந்தும், கோயிலில் ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் தரிசன விழாவின் போது, அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஆனி திருமஞ்சன தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதையொட்டி, அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் பெயரில் திருவிழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அதற்கு போட்டியாக, பொது தீட்சிதர்களுக்கு சொந்தமான கோயில் என, தீட்சிதர்கள் மற்றும் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் பெயரில், மற்றொரு திருவிழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தான், சிதம்பரத்தில் சமீப கால பரபரப்பு செய்தி!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar