காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள ஜெயங்கொண்டான் பாலசுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு தெப்பத் தேர்விழா நடந்தது. முன்னதாக சுவாமி பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து தெப்பத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், முழு அலங்காரத்துடன் தெப்பத்தேர் உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.