Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவலூர் மாரியம்மன் தேரோட்டம்! சபரிமலை நடை திறப்பு: ஏப்.,15ல் விஷூ கொண்டாட்டம்! சபரிமலை நடை திறப்பு: ஏப்.,15ல் விஷூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

10 ஏப்
2015
10:04

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம், கொட்டும் மழையில், நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா, கடந்த மார்ச் 24ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தேர்த்திருவிழாவின், முக்கிய நிகழ்வான, தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. இதனையொட்டி, நேற்று காலை, 6:30 மணிக்கு, அம்மன் நீலப்பட்டு உடுத்தி, சூலத்தேவர் சுவாமியுடன், திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை 4.25 மணிக்கு, மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப, அலங்கார திருத்தேர், வடம் பிடிக்கப்பட்டது.நான்கு புறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில், தேர் அசைந்தாடி சென்றது. தேர் வடம் பிடிக்கப்பட்ட, சிறிது நேரத்தில், சாரலாக துவங்கிய மழை, தீவிரமடைந்தது. இதனால், கொட்டும் மழையில், தேர் நகர்ந்தது. பழநிரோடு, தளிரோடு, குட்டைத்திடல், தங்கம்மாள் ஓடை, தல கொண்டம்மன் கோவில் வழியாக, மாலை தேர் நிலையை அடைந்தது.

கோவில் வளாகம் முதல், தேர் வலம் வந்த பாதைகளில் குவிந்திருந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தேரில் பவனி வந்த அம்மனை வழிபட்டனர். தேரோட்ட வீதியில், இருந்த கட்டடங்களில், நின்று அம்மனுக்கு மலர் துாவி, பக்தர்கள் வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், உடுமலை நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் தாகம் தணிக்க, நீர் மோர் பந்தல், வழியெங்கும் அமைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.விழாவில், இன்று இரவு 8:00 மணிக்கு, பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு, வாணவேடிக்கையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar