பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற் சவம் நடந்தது.
இக்கோவிலில் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்து டன் பிரம்மோற்சவம் துவங்கியது. கடந்த 7ம் தேதி பாஞ்சாலன் அர்ச்சுனனால் கட்டுண்டஉற்சவம், 8ம் தேதி அரக்கு மாளிகை உற்சவம், நேற்று முன்தினம் (9ம் தேதி) பக்காசூரன் உற்சவம் நடந்தது.
நேற்று காலை திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணிக்கு மூலவர் திரவுபதி அம்மனுக்கும், உற்சவர் அர்ச்சுனனுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு உற்சவர் அர்ச்சுனன், திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இன்று (11ம் தேதி)மாலை பாண்டவர் வனம்புகுதல் நிகழ்ச்சியும், நாளை (12ம் தேதி) தபசு உற்சவம், 13ம் தேதி மாடுபிடி சண்டை, 14ம் தேதி அரவான் கடபலி, வெள்ளை யானை புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி கர்ணமோட்சம் 16ம் தேதி சக்கரவர்த்தி கோட்டை உற்சவம், 17ம் தேதி மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், 18ம்தேதி மஞ்சள்நீர் பட்டாபிஷேகம், 24ம் தேதி நிறைமணி உற்சவமும்நடக்கிறது.