பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
10:04
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காலை, மாலை வேளைகளில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சந்தனக் காப்பு நடந்தது.மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மகாபாரதமும், இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்தது.நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அக்னி குண்டம் அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தவர்கள் தீ மிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.