பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
11:06
தென்காசி : தென்காசி பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நந்தி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தென்காசி குலசேகரநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. நந்தி வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும் சிறப்பு வழிபாடும் நடந்தது. தென்காசி மேலசங்கரன் கோயில், இலஞ்சி குமாரர் கோயில், குற்றாலநாதர் கோயில், செங்கோட்டை சிவன் கோயில் மற்றும் தென்காசி சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.