Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செண்பகவல்லியம்மன் கோயில் தேரோட்டம் ... பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி:  தங்க கவச அலங்காரத்தில் மூலவர்! பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் அவதி!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
04:04

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையில், கோயிலுக்குள் மழை நீர் தேங்கியது. இதனால், பக்தர்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரத்தில் அதிகாலை 4 முதல் 6 மணி வரை பெய்த பலத்த மழையால், ராமநாதசுவாமி கோயிலில் 1 மற்றும் 2 ம் பிரகாரங்களில் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. இவ்வழியாக தீர்த்தக்குளங்களில் நீராடவும், சன்னதியில் சுவாமி தரிசனத்திற்கும் சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும்கோயிலின் உபகோயில்களான தனுஷ்கோடி தேசிய சாலையில் உள்ள லட்சுமணர் கோயில், இதன் தீர்த்த குளத்தை சுற்றிலும் ஒரு அடி உயரத்திற்கு மழை நீரும், கழிவு நீரும் தேங்கி நின்றதால், அங்கும் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மொத்தம் 13 ஏக்கரில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 3 பிரகாரங்கள் மீது விழும் மழை நீரை, வடக்கு, கிழக்கு வாசல் வழியாக கடலுக்கு கடத்த தனி வாறுகால் வசதி உள்ளது. இதை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாததாலும், அதனுடன் தனியார் லாட்ஜ் உரிமையாளர்கள் கழிவு நீர் குழாய்களை இணைத்ததாலும், வாறுகாலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய கோயில் நிர்வாகம் முன்வராததால், கடந்த 5 ஆண்டுகளாக கோயிலுக்குள் மழை நீர் தேங்கும் அவலம் தொடர்வதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar