Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பாலமலை ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக ... திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் 45 டன் கல்லில் பிரமாண்ட யாழிகள் ரூ. 20 கோடியில் பணி! திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னம்மன் - பெரியம்மன் கோவிலில் திருப்பணி!
எழுத்தின் அளவு:
சின்னம்மன் - பெரியம்மன் கோவிலில் திருப்பணி!

பதிவு செய்த நாள்

17 ஏப்
2015
11:04

அன்னுார் : அன்னுாரில், 1,300 ஆண்டு பழமையான சின்னம்மன், பெரியம்மன் கோவிலில் திருப்பணி நடக்கிறது.

சோழ மன்னர் கரிகாலன், கொங்கு நாட்டுக்கு வந்து இருளர்கள் துணையோடு, கரூர் முதல் முட்டம் வரை, ஏழு சிவாலயங்கள், 36 பெரிய கோவில்கள், 360 சிறு கோவில்களை கட்டி திருப்பணி செய்தார். சேரமானுடன் நட்பு ஏற்பட்டு, சோழன் மகளுக்கும், சேரன் மகனுக்கும் திருமணம் நடந்தது.சேரன், சோழன் இணைந்து, திருமலை என்கிறவரை நியமித்து, அன்னியூர் (அன்னுார்) கோட்டை நகரை ஸ்தாபித்தனர். கோட்டை நகருக்கு வனதுர்க்கைகளாக பெரியம்மன், சின்னம்மன் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து, பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களை மானியமாக வழங்கினர். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தவும் அறிவுறுத்தினர். இத்தகவல்கள் அனைத்து ஓலைச்சுவடிகளான சோழன் பூர்வ பட்டயத்தில் உள்ளது. தற்போது கோவிலில் உள்ள கல் விக்ரகங்கள், 1,300 ஆண்டுகள் ஆனவை.

பல்வேறு காரணங்களால் கோவிலில் திருவிழாக்கள் பெரிதாக நடத்தப்படாமல், போனது. கோவிலுக்கு சொந்தமாக, 18 ஏக்கர் நிலம் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பிரிவினருக்கு குலதெய்வமாக உள்ளது.இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை வசம் வந்த இக்கோவிலில், திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு மூன்று நிலை கோபுரம் மற்றும் முன் மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆறு மாதங்களுக்குள் பணி முடித்து, கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar