கருமத்தம்பட்டி : வாகராயம்பாளையத்தில் சுவாமி விவேகானந்தர் சேவா மைய திறப்பு விழா நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சார்பில், சுவாமி விவேகானந்தர் சேவா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கோவை கோட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மாயாண்டி முன்னிலை வகித்தார். தனியார் நிறுவன பொதுமேலாளர் கங்காரத்னா குத்துவிளக்கு ஏற்றி மையத்தை துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள் கூறுகையில், இம்மையத்தில் சிறுவர்களுக்கான பண்பு பயிற்சிகள் வழங்கப்படும். பாரம்பரிய வீர விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்படும் என்றனர். தொடர்ந்து கரிச்சிபாளையத்தில் சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்ற கூடுதல் நடந்தது. இதில் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.