உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் கோவிலிலுள்ள துர்க்கையம்மனுக்கு, 108 பால் குட அபிஷேகம் நடந்தது. மழை ÷ வண்டியும், உலக நன்மைக்காகவும் உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் கோவிலிலுள்ள துர்க்கையம்மனுக்கு, 108 பால் குட அபிஷேகம் நடந்தது. முன்னதாக பஸ் நிலையம் அருகே நேற்று காலை பால் குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கு பாலபிஷேகம், தீபாராதனை பாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.