பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனையொட்டி இன்று (18ம் தேதி) காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:30 மணிக்கு காலை பூஜை, 7:00 மணிக்கு மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சேவை சாதிக்கிறார். பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6:00 சாயரட்சை பூஜையும், இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது.