ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தின் வடது புறத்தில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. ஆலங்குடிக்கு அடுத்தாற்போல் விருதுநகர் மாவட்டத்தில் தட்சிணாமூர்த்திக்கென தனிக்கோயில் இங்கு மட்டுமே உள்ளது.இக்கோயிலின் பிரதான சன்னதியான தட்சிணாமூர்த்தி சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், ராகு கால துர்க்கை, முருகன் ஆகிய சன்னதிகளும் உள்ளன. இங்கு இயற்கையிலே வில்வ மரங்களும் வளர்ந்துள்ளன. இக்கோயிலின் அர்த்த மண்டபத்தினை மேல்நோக்கி பார்த்தால் சிவபெருமான் சுழலும் லிங்கமாக காட்சி தருகிறார். 360 டிகிரி கோணத்தில் நாம் எங்கு நின்று லிங்கத்தை வணங்கினாலும் நமக்கு லிங்கம் நேர் நின்று காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். கோயிலின் எதிர்புறம் கீழ்பக்கத்தில் ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. ஒரே இடத்தில் ஆண்டாள் நீராடும் திருமுக்குளம், தட்சிணாமூர்த்தி , ஆஞ்சநேயர் கோயில்கள் அமைந்துள்ளது பக்தர்களுக்கு பரவசத்தை தருகிறது.