பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
12:04
குறிச்சி : குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -2 பகுதியிலுள்ள தர்மசாஸ்தா கோவிலின், 19ம் ஆண்டு விழா, இன்று துவங்குகிறது. விழாவின் துவக்கமாக, இன்று மாலை, 6:00 மணி முதல், தந்திரீக பூஜை, தீபாராதனை, ஹரிவராசனம் நடக்கின்றன. நாளை அதிகாலை, 5:00 மணி முதல், மகாகணபதி பூஜை, உத்சவ சிறப்பு பூஜை, மாலை, 6:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, விளக்கு பூஜை, நடனம், சிறப்பு பூஜை, தீபாராதனை, ஹரிவராசனம் ஆகியவை நடக்கின்றன.22ம் தேதி இரவு, 7:00 மணிக்கு இரட்டை தாயம்பகா நிகழ்ச்சி நடக்கிறது. 23, 24ம் தேதிகளில், சிறப்பு பூஜை, நெல்பறா, தீபாராதனை நடக்கிறது.மேலும், சிறப்பு பூஜை, பள்ளிவேட்டை, பாண்டிமேளம், பள்ளிகுருப்பு, தீபாராதனை, ஹரிவராசனம் ஆகியவையும் நடக்கின்றன.25ம் தேதி, அதிகாலை, 5:00 முதல் மதியம், 12:00 மணி வரை, பள்ளிகுருப்பு உணர்தல், சிறப்பு பூஜை, நெல்பறா, தீபாராதனை நடக்கின்றன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 4:00 மணிக்கு, சுவாமி ஊர்வலம், கொடியிறக்கம் உள்ளிட்டவை நடக்கின்றன. இரவு, 10.00 மணிக்கு, அத்தாழ பூஜை, பூத பலி, கலசாபிஷேகம், தீபாராதனை, பிரசாத வினியோகம் மற்றும் ஹரிவராசனம் நடக்கின்றன.ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.