வடமதுரை : காணப்பாடியில் ஐந்துபந்தி முத்தம்மாள், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள், சப்தகன்னிமார், பொம்மனன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. வேடசந்தூர், திண்டுக்கல் தாலுக்காக்களில் வசிக்கும் கோயில் தலைக்கட்டுதாரர்கள் பொங்கல் வைத்து அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாட்டினை ஒக்கலிகர் குஞ்சடி காப்பு கரவனவார் குல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.