பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
12:04
நகரி:காணிப்பாக்கம், வரசித்தி விநாயகர் கோவிலில், 16 நாட்களில் பக்தர்கள், 44.96 லட்சம் ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். அந்த வகையில், கடந்த, 16 நாட்களில் பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை கோவில் அதிகாரி பூர்ண சந்திரராவ் தலைமையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 44,96,965 ரூபாய் ரொக்கம், 22 கிராம் தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 40 வெளிநாட்டு டாலர்கள், உண்டியலில் செலுத்தி இருந்தனர்.