Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அட்சய திரிதியை முன்னிட்டு  காலடியில் கனகதாரா யாகம்! அட்சய திரிதியை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகருக்கு கைகொடுத்த கோடைமழை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
06:04

ஆண்டிபட்டி; தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை காரணமாக வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கும் அழகரை வரவேற்க அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்தாலும் இதுவரை அணைக்கு வந்துசேரவில்லை. இருந்தபோதும் தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் ஆகியவற்றால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஏப்ரல் 12-ல் 35.99 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் ஏப்ரல் 15-ல் 36.09 அடியாகவும், ஏப்ரல் 17-ல் 37.34 அடியாகவும், இன்று காலை 6 மணிக்கு 37.96 அடியாகவும் உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீருக்காக வினாடிக்கு 40 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 210 கன அடியாக இருந்தது. மூலவைகை ஆற்றில் இருந்து வரும் நீர் சிலதினங்களில் அணைக்கு வந்து சேரும் என்பதாலும், அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கோடை மழைக்கான சூழல் தொடர்வதாலும் அணையின் நீர் மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு இம்மாத இறுதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar