Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 1330 ... சிதம்பரம் நடராஜர் கும்பாபிஷேகம்: யாகபூஜை இன்று ஆரம்பம்! சிதம்பரம் நடராஜர் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை கோயிலில் பழமைவாய்ந்த சுவாமி சிலைகள் கொள்ளை!
எழுத்தின் அளவு:
திருவாடானை கோயிலில் பழமைவாய்ந்த சுவாமி சிலைகள் கொள்ளை!

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
04:04

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 100 ஆண்டு பழமைவாய்ந்த 7 வெண்கல சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்று விட்டனர். ராமநாதபுரம், திருவாடானையில் பிரசித்தி பெற்றது ஆதிரெத்தினேஸ்வரர் கோயில். நேற்று அதிகாலை 5 மணிக்கு,வழக்கம் போல் கோயிலின் முன்புற கதவை திறந்த காவலர் தர்மலிங்கம், உட்பிரகார கதவை திறக்க முயன்றார். பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி செயல் அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக, கோயிலைச் சுற்றி மூங்கில் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் மூங்கில் சாரத்தில் ஏறி, கோயிலுக்குள் இறங்கி கதவின் பூட்டை உடைத்து வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர், முருகன், சந்திரசேகர், பவானிஅம்மன், அம்மன் ஆகிய சிலைகளையும், வேல், பீடம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பறியும் மோப்பநாய் சூச்சனி கிராமம் வழியாக ஓடி, வயல் பகுதியில் நின்றது. அங்கு கொள்ளை போன வேல் மட்டும் கிடந்தது. அதை போலீசார் கைபற்றினர்.

இதுகுறித்து ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன் கூறியதாவது: கொள்ளை போன சிலைகள் 100 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கல சிலைகள் என தொல்பொருள் ஆய்வு துறையினர் சான்றிதழ் வழங்கியுள்ளனர். கோயிலுக்கு இரவு காவலர் இல்லை. கண்காணிப்பு கேமரா வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன சோமஸ்கந்தர் என்ற சிறிய சிலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை,” என்றார். திருவாடானை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். தகவலறிந்த தொகுதி எம்.ஏல்.ஏ., சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, ஒன்றியத்தலைவர் முனியம்மாள் ஆகியோரும் வந்து கோயிலை பார்வையிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar