புதுச்சேரி: முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
முத்தியால்பேட்டை பெருமாள்பேட்டை வீதி பெரியபாளையத்தம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.