பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
12:04
அவிநாசி : திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 7:30 முதல், 9:00 மணிக்குள், கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன்பின், சுவாமி புறப்பாடு நடக்கிறது. இரவு 9:00க்கு, திருமுருகன் பூண்டியில் இருந்து திருமுருகநாத சுவாமி வருகை தரும் காட்சி நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம், ஏப்., 27 இரவு 7:00க்கு துவங்கி, விடிய விடிய நடக்கிறது.ஏப்., 28ல் திருக்கல்யாண உற்சவம், கற்பக விருட்சம், யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 29 அதிகாலை 5:00க்கு பூர நட்சத்திரத்தில், விநாயக பெருமான், சோமாஸ்கந்தர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், தேர் களுக்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். மறுநாள் (30ம் தேதி) காலை 10:00க்கு தேரோட்டம் நடக்கிறது. மே 1 இரவு அம்மன் தேர் வடம் பிடித்தல்; 2ல் வண்டித்தாரை, பரிவேட்டை, தெப்போற்சவம்; 3ல் நடராஜ பெருமானின் பிரம்ம தாண்டவ தரிசன காட்சி நடைபெறுகிது. வரும் 4 காலை மஞ்சள் நீர் விழா நடக்கிறது. தினமும் மாலை 6:30க்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலை யரங்கில், கலை நிகழ்ச்சி நடைபெறும்.