பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
12:04
உடுமலை : கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. உடுமலை அருகே கொழுமத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி, விக்னேஷ்வர பூஜை, சுத்தி புண்ணியவாசனத்துடன், நேற்று துவங்கியது.காலை 8:30 மணியளவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 11:00க்கு, திருக்கம்பம் நடப்பட்டது. இன்று முதல், மே 5 வரை, தினமும் ஐந்து கால பூஜை, அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும்.மே 5 இரவு 8:00க்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம், அதைத்தொடர்ந்து வீதியுலா நடக்கிறது. மே 6 இரவு, 9:00க்கு, திருத்தேர் உலா நடைபெறுகிறது; 7ல் மஞ்சள் நீராட்டும்; 12 வரை, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். மே 13 மாலை 6:00க்கு, மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.