பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
12:04
பரமக்குடி : பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகரசுவாமி(ஈஸ்வரன்) கோயிலில் சித்திரைத் திருவிழா, நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 7 மணிக்கு பிரியாவிடையுடன் சுவாமி, விசாலாட்சி அம்மன் சிம்மா சனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர். மே 2 வரை நடக்கும் இத் திருவிழாவில், இன்று முதல் தினமும் நந்திகேஸ்வரர், கிளி, குண்டோதரன், சிம்ம, கைலாச கற்பக விருஷ, அன்ன, ராவணகைலாச, காமதேனு, ரிஷபம், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்கில் வீதியுலா சுவாமியும், அம்மனும் வீதி உலா வரவுள்ளனர். முக்கிய நிகழ்ச்சியாக, ஏப்.,28 ல் திக்விஜயமும், மறுநாள் காலை கமல வாகனத்தில் தபசு கோலமும், மாலை 5 மணிக்கு மாலை மாற்றுதலும் நடை பெறும். ஏப்., 30 ல் காலை 11 முதல் 12.30 மணிக்குள் திருக்கல்யாணமும், இரவு பூப்பல்லக்கில் பட்டணப் பிரவேசமும் நடக்கும். மே 1 ல் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். மறுநாள் கொடியிறக்கத்துடன் விழா நிறை வடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.