கொடைக்கானல் : கொடைக்கானல் ஆனந்தகிரி முதல் தெருவில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஏப்.,27 முதல் மே 4வரை அம்மன் ஊர்வலம் நடைபெறும். தினசரி ஒவ்வொரு பகுதிக்கும் விளக்கு அலங்காரத்துடன் மண்டகப்படிகள் தங்கி, அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மே 5 ந்தேதி சக்தி கரகம், மாவிளக்கு, 6 ந்தேதி செண்டை மேளத்துடன் அக்னிசட்டி மற்றும் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், மே 12 ந்தேதி அம்மனுக்கு மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறவுள்ளது. கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னனி, விவேகானந்தா இந்து இயக்கம், ஆனந்தகிரி இளைஞரணியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.