பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
12:04
திண்டிவனம்: கீழ்மாவிலங்கை பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. திண்டிவனம் அடுத்த கீழ்மாவிலங்கை பெரியநாயகி சமேத பெரியாண்டவர், அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலை புனிதகலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து விநாயகர், மூலவர் பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன், அம்மச்சார் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சித்திபுத்தி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், ஆலமர்செல்வர், பிரம்மா, திருமால், கொற்றவை, நந்திபெருமான், 108 சிவ கனங்கள், நவகிரக சன்னதி ஆகியவற்றுக்கு காலை 9:40 மணிக்கு புனிதகலச நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் நடத்தி வைத்தார். யாகசாலை பூஜைகளை திண்டிவனம் சித்தாந்த சைவநெறிச் சங்கத்தினர், தமிழ்முறைப்படி நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.