கூடலுார் : கூடலுார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. மேல்கூடலுார் பகுதியில் உள்ள, அருள்மிகு விநாயகர் மற்றும் சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 10ம் தேதி துவங்கியது. 12ம் தேதி மாலை, 6:30 மணிக்கு அம்மன் காப்பு கட்டி ஆற்றிலிருந்து குடியழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தன. 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை, மதியம், 12:30 மணிக்கு கும்ப ஊர்வலம் நடந்தது. 20ம் தேதி மாலை, 6:30 மணிக்கு தேரில் அம்மன் வீதி உலா ஊர்வலம் நடந்தது. நேற்று, மாலை மஞ்சள் நீராடி, மாரியம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.