சட்டைநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியெற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2015 12:04
மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ,இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை திருமுலைப்பால் விழா நடைபெறுகிறது. நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் கோவிலில் உ ள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ திருநிலைநாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அ ருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் அழுதுகொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு, அம் பாள் ஞானப்பால் வழங்கினார். தொடர்ந்து திருஞானசம்பந்தர் தனது 3 வது வயதில் தோடுடைய செ வியன் என்ற முதல் தேவார பாடினார். இதனை போற்றும் வகையில் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிம்மோற்சவத்தின் 2வது நாளன்று திருமுலைப்பால் திருவிழா நடைபெறுகிறது.இவ்வாண்டு பி ரம்மோற்சவ திருவிழா காலை 9.30மணிக்கு மிதுனலக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர், கொடி மர வினாயகர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதணை செய்யயப்பட்டு திருவிழா கொடியேற்றப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் நமச்சிவாய என கோஷமிட்டு மலர் துõவி வழிபட்டனர். திருமுலைப்பால் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் சிராப்பு செந்தில், சூப்பிரண்டு தியாகராஜள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.