திருவாரூர்: கொரடாச்சேரி அருகே வெண்ணை வாசல் கல்லுளி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று 1008 பால்குட ஊர்வலமும் பின்னர் அம்ம னுக்கு பாலாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணை வாசலில் வரலா ற்று சிறப்பு மிக்க கல்லுளி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டு தோறும் சித்திரைமாதம் பால்குட ஊர்வலம் மற்றும் பல்வேறு காவடி ஊற்வசவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 24 ம் தேதி துவங்கி அதி விமர்சியாக நடந்து வருகிறது. நேற்று காலை 9.00 மணிக்கு வெட்டாற்றுப் பாலம் அருகில் உள்ள வினயாகர் கோவிலில் துவங்கிய 1008 பால்குட ஊர்வலம் துவங்கி ஆறு பிரி வாக இரவு 12.00 மணி வரை கோவி லை வந்தடைந்தது. அதன் பின் அம்ம னுக்கு பால் அபிஷேகம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பின் பல்வேறு காவடிகள் ஊர்வ லமாக கோவிலை சென்றடைந்தது. வரும் 1 ம் தேதி அம்பாள் ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.