திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 19ம் தேதி துவங்கி, தினசரி இரவு 7.30 மணிக்கு பரனுõர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடந்தது. உலகளந்த பெருமாள் கோவிலில் இருந்து காலை 8:00 மணிக்கு ஸ்ரீ சீதா லஷ்மண அனுமத்த சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, வீதியுலா நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 9:30 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், சத்சங்க நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.