பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
11:04
கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடியில் வரலாற்று சிறப்பு பெற்ற சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியில் லோகாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 10ம் நுõற்றாண்டின் பி ற்பகுதியில் பராந்தக சோழ மன்னனால் சீரமைக்கப்பட்டது. சந்திர பகவான் தன் சாபம் நீங்குவதற்கு சோமநாதீஸ்வரரை பூஜை செய்து, விமோசனம் பெற்றார். இக்கோவிலில் தங்கி, காஞ்சி ஆதிசங்கரர் பூஜை செய்துள்ளார். இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் மே 1ம் தேதி நடக்கிறது. கோவில் சிற்ப வேலைகளை திருக்கடையூர் ஸ்தபதி ஆறுமுகம், வடிவமைத்துள்ளார். யாகசாலையில் 18 வேதிகை மேடையும், 26 யாக குண்டங்களும் அமைக்கப்படுகிறது. பிரத்யேகமாக சிவனுக்கு பந்தாசன வேதிகையும், அம்மனுக்கு சக்ர வடிவில் வேதிகையும், அமைத்து பஞ்சாக்னி குண்டங்கள் அமைக்கப்படுகிறது. விழாவையொட்டி நாளை (29ம் தேதி) காலை பூர்வாங்கம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், கணபதி, லஷ்மி, நவக்கிரக யாகங்கள் நடக்கிறது. மாலை யாகசாலை பிரவேச பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 30ம் தேதி காலை, மாலை யாகமும், பூ ஜைகளும் நடக்கிறது. மே 1ம் தேதி காலை 9:30 மணிக்குமேல் 10:30 மணிக்குள் 13 கோவில் விமானங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி சிவன் கோவில் அம்பிகேஸ்வர குருக்கள் சர்வசாதகம் தலைமையில் 43 சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்துகின்றனர். ÷ சாமநாதீஸ்வரர் கோவில் பரம்பரை குருக்கள் சபேசன் பூஜைகளை செய்கிறார். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் சண்முகம், ரவி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.