பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
11:04
வாலாஜாபாத்: பழமை வாய்ந்த வீமீஸ்வரர் கோவில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை, அந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செரப்பணஞ்சேரி கிராமத்திலிருந்து கூழங்கல்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில், வீமீஸ்வரர் கோவில் உள்ளது. ௧,௩௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த கோவில். பெரிய பரப்பளவில் இந்த கோவில் இருந்திருக்க வேண்டும். தற்÷ பாது கருவறை மட்டுமே இருக்கிறது. அர்த்த மண்டபம், மகா மண்டபங்களின் அடிப்பாகம் மட்டுமே உள்ளது. துாண்கள், மேற்கூரை போன்றவை காணவில்லை. கருவறை, துாங்கானை மாட வடிவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் அதிஷ்டானத்தில், கல்வெட்டுகளும், சிற்பங்களும் உள்ளன. திருப்பெருஞ்சூர் மற்றும் சோழவந்தநல்லுார் என, அழைக்கப்பட்ட பகுதியே தற்போது, செரப்பணஞ்சேரி என, மாறியதாக கூறப்படுகிறது. வீமீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலங்கள் இருந்ததாகவும், தற்போது, ௫ ஏக்கர் நிலம் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவிலை சீரமைத்து பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் துறை மற்றும் இந்து சமய அறநிலை துறையினர், விரைந்து கோவிலை புனரமைத்தால் தான், கல்வெட்டு ஆதாரங்களை அழியாமல் பாதுகாக்க முடியும். பக்தர்கள் ஒன்றிணைந்து, ௨௦௦௯ம் ஆண்டு, கருவறையின் மேற்பகுதியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து, பிரதோஷ பூஜை மற்றும் ஒருகால பூஜை நடத்தி வருகின்றனர்.