Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி பாத யாத்திரை ... சிதம்பரம் நடராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருப்பணி: கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
11:04

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கண்ணன், நேற்று பார்வையிட்டார். பிரசித்தி பெற்ற திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஸ்ரீரங்கத்துக்கு, ஏராளமானோர் வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலில் கடந்த, 2001 மார்ச், 15ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதனடிப்படையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 10 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்படும், என கடந்த, 2014 ஜூன், 5ம் தேதி அறிவித்தார். இதையடுத்து கடந்த, 2014 ஜூன், 26 ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பணிகள் துவங்கியது. கடந்தாண்டு டிசம்பர் மாதமே பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டு, 10 மாதங்களாகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. இது குறித்து காலைக்கதிர் நாளிதழில் கடந்த, 24ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவிலில், கும்பாபிஷேகத்துக்கான பல்வேறு திருப்பணிகளை பார்வையிட்டார். அப்போது, பணிகள் எப்போது முடியும், கும்பாபிஷேக தேதி எப்போது என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எப்போது, பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடக்கும், என்று எனக்கு எதுவும் தெரியாது” என்று கூடுதல் தலைமை செயலாளர் கண்ணன் தெரிவித்தார். கோவில் இணை ஆணையர் ஜெயராமன், சுற்றுலா துறை மாவட்ட அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar