ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 3ம் தேதி பால்குட அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2015 12:04
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 3ம் தேதி பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. கடலூர் அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் 3ம் தேதி 300 பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி காலை 7:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 8:30 மணிக்கு குயவர் வீதியில் உள்ள விநாயகர் கோவிலிலிருந்து பக்தர்கள் பால்குடங்களை ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது.