திருநள்ளார் சனிபகவான் கோவில் நடைப்பாதை பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2015 02:05
காரைக்கால்: திருநள்ளார் சனிபகவான் கோவில் ராஜகோபுரம் வாசல் முன்பு ரூ.8 லட்சம் மதிப்பில் நடைப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி வரும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் கோவில் ராஜகோபுரம் வாசல் முன்பு கான்கீரீட் மூலம் மேற்கூரை அமைக்கும் பணிகள் முடிவந்தது.மேலும் கோடைக்காலம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.8 லட்சம் மதிப்பில் நடைப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.