வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2015 11:05
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் (3ம் தேதி) மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் மாட வீதியில் 16 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11:00 மணிக்கு பவுர்ணமி அபிஷேகமும், 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.