Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் அருகே பழமையான அய்யனார் ... திருவொற்றியூர் அம்மன் கோவில்களில் தீ மிதி விழா! திருவொற்றியூர் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

05 மே
2015
11:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள்  பங்கேற்றனர்.   பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழா, அனுக்ஞை, விச்வக்சேன ஆராதனம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கடந்த மாதம் 24ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து, 25ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும்; மாலை, 5:00 மணிக்கு புண்யாக வாஜனம், ரட்சாபந்தனம், யாகசாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.  தொடர்ந்து, தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மே 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்றுமுன்தினம் காலை, 10:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் தேரில் ஏளப்பண்ணுதல், வடம்பிடித்தல், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு தீர்த்த வாரி நிகழ்ச்சியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், கண்டருலுதல், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar