பதிவு செய்த நாள்
05
மே
2015
11:05
எண்ணுார்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, எண்ணுார், எர்ணாவூர் மற்றும் திருவொற்றியூரில் உள்ள அம்மன் கோவில்களில், தீமிதி விழா நடைபெற்றது. எண்ணுார், அன்னை சிவகாமி நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி பீலிக்கான் முனீஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த, 2ம் தேதி இரவு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீமிதி விழா நடந்தது. திருவொற்றியூர், சாத்தாங்காட்டில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி விழாவுடன், 101 பால்குட ஊர்வலமும் நடைபெற்றது. எர்ணாவூர் மாகாளியம்மன் கோவிலில், 10வது ஆண்டாக, இளைஞர் அணி சார்பில், 1000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது.