Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் ... அருவங்காடு முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2015
02:05

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பஞ்ச பிரகார விழா எனப்படும் வசந்த உற்சவம், நாளை (6ம் தேதி) துவங்கி வரும், 20ம் தேதி வரை நடக்கிறது. திருச்சி, சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், வசந்த உற்சவம் எனப்படும், பஞ்ச பிரகார விழா நாளை, (6ம் தேதி) துவங்குகிறது. வரும், 20ம் தேதி வரை நடக்கும் விழாவை முன்னிட்டு, தினசரி காலை, 10 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடு நடக்கிறது. 9வது நாள் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஐந்து பிரகாரங்களிலும் அம்மன் உலா வரும் நிகழ்ச்சி வரும், 15ம் தேதி நடக்கிறது. அன்று காலை, வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு, 12 மணிக்கு அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி மூலஸ்தானம் கருவறை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடி மரத்தில் இரண்டாவது சுற்று, தங்க ரதம் வலம் வரும் பிரகாரத்தில் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதி வடக்கு மாடவாள வீதியில் நான்காவது சுற்று, கீழ ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதியில் ஐந்தாவது சுற்று என ஐந்து பிரகாரங்களில் வலம் வருகிறார். வரும், 16ம் தேதி முதல், 20ம் தேதி வரை தினசரி இரவு, 10 மணிக்கு அம்மன் தங்க சிம்ம வாகனம், முத்து பல்லக்கு, தங்க கமல வாகனம், வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி காமதேனு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar