உளுந்தூர்பேட்டை : பாதூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் பாதூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கிய நிகும்பலா யாகத் தில் சங்கல்பம், சிறப்பு பூஜை கள் நடந்தது. தொடர்ந்து 11.45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மற்றும் நெய், பழ வகைகள், பால் சேர்ப்பிக்கப்பட்டன. தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி பக்தர்கள் எழுதி வைத்த வெற்றிலையை யாககுண்டத்தில் சேர்ப்பித்தனர்.கோவில் பரம்பரை அறங் காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகத்தை நடத்தினர்.