பதிவு செய்த நாள்
06
மே
2015
11:05
திருவெண்ணெய்நல்லுார்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், கூவாகம், கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று, சுவாமிக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில், திருநங்கைகள், பூ சாரிகள் கையால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அப்போது, திருநங்கைகளிடம், பக்தர்கள் ஆசி பெற்றனர். இளைஞர்கள், திருநங்கைகளுடன் மொபைல் போனில், ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, அரவான் சிரசுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், காலை 6:30 மணிக்கு, தேரோட்டமும் நடக்கின்றன. பகல் 12:00 மணிக்கு, அழுகளம் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு, உறுமைச் சோறு படையலும், இரவு 7:00 மணிக்கு, காளிக்கோவிலில், அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சியும் நடக்கின்றன.