திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.